ஒரு மாநிலத்தில் 11 மாவட்டங்கள் உள்ளன ஆனால் ஒரே ஒரு ரயில் நிலையம் தான் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.
உலகிலியே மிகப்பெரிய ரயில் வழித்தடங்கள் இந்தியாவில் உள்ளது. கிட்டதட்ட 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரயில்வே நிலையங்கள் இந்தியா முழுவதும் உள்ளன. தினம் தினம் லட்சக்கணக்கான மக்கள் நாடு முழுவதும் ரெயிலில் பயணம் செய்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக வருமானம் வரும் துறையாக ரயில்வே இருந்து வருவதால் ரயிவேக்கு தனி பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படி மிகப்பெரிய நெட்வொர்க் உள்ள ரயில்வே துறையில் ஒரு மாநிலத்தில் மட்டும் ஒரே ஒரு ரயில் நிலையம் தான் உள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? அந்த மாநிலம் மிசோரம். அங்குள்ள பைராபி என்ற நகரில்தான் அந்த ஒற்றை ரயில் நிலையம் அமைந்துள்ளது.
இதனையும் படியுங்கள்: இணையத்தில் வைரலாகும் வெள்ளை நிற மான்குட்டி!
மிசோரம் மாநிலத்தில் மொத்தமாக 11 மாவட்டங்கள் உள்ளன. சுமார் 10 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் ரெயில் பயணம் செல்ல விரும்பினால் பைராபி ரயில் நிலையத்திற்குத்தான் செல்ல வேண்டும். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு மிசோரம் மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் செல்ல வேண்டுமெனில் பைராபி ரயில் நிலையம் தான் ஒரே வழி. அங்கு சென்று ரெயிலை பிடிப்பதற்குள் பயணிகளுக்கு போதும் போதும் என்று ஆகிவிடும்.
பைராபி ரயில் நிலையத்தில் முறையான வசதிகளும் இல்லை என சொல்லப்படுகிறது. மொத்தம் 3 நடைமேடைகள் மட்டுமே இந்த ரயில் நிலையத்தில் உள்ளன. ரயில்கள் வந்து செல்வதற்கு நான்கு ரயில் வழித்தடங்கள் மட்டுமே உள்ளன. 2016-ம் ஆண்டு வரை இந்த வசதிகள் கூட இல்லாமல் சிறிய ரயில் நிலையமாகத்தான் இருந்ததாகவும் இதன் பின்னர்தான் மறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மிசோரம் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையும் படியுங்கள்: மெரினாவில் ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் – மடக்கி பிடித்த போலீசார்!
மிசோரமில் இன்னொரு ரயில் நிலையம் அமைப்பதற்கு இந்திய ரயில்வே பரிந்துரை செய்துள்ளது. பைராபி ரெயில் நிலையத்தை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைப்பதற்கான செயல் திட்ட மும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ரயில்வேயில் பரிந்துரையை அடுத்து பைராபி-சாய்ராங் ரெயில் பாதை திட்ட பணிகள் 51.38 கிலோமீட்டர் தொலைவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தமாக 21,089 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மிசோரம் மாநிலத்தில் உள்ள ஒற்றை ரயில் நிலையம் கூட அதன் தலைநகரமான ஐஜ்வாலில் இல்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
– யாழன்