ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா கடந்து வந்த பாதையை விரிவாக பார்ப்போம்.
⦁ நவம்பர் 21, 2020 – ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதித்து முதன்முறையாக அவசர சட்டம் கொண்டு வந்தது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசு.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
⦁ பிப்ரவரி, 2021 – ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றம்.
⦁ இதனை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன
⦁ ஆகஸ்ட் 3, 2021 – உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க மறுத்து சட்டத்தை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
⦁ ஜூன் 6, 2021 – திமுக ஆட்சிக்கு வந்த பின் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ‘ஆன்லைன் சூதாட்டம்’ தொடர்பான குழு நியமனம்.
⦁ ஜூன் 27, 2022 – ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையிலான குழு தமிழ்நாடு அரசிடம் அறிக்கை தாக்கல்.
⦁ செப். 26, 2022 – ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல்.
⦁ அக்டோபர் 1, 2022 – அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.
⦁ அக்டோபர் 3, 2022 – ஆளுநர் ஒப்புதல் வழங்கிய நிலையில், அவசர சட்டம் அரசிதழில் வெளியீடு.
⦁ அக்டோபர் 19, 2022 – ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்.
⦁ அக்டோபர் 26, 2022 – ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.
⦁ நவம்பர் 23, 2022 – ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்து விளக்கம் கேட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி.
⦁ டிசம்பர் 1, 2022 – ஆளுநரை நேரில் சந்தித்து சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் விளக்கம்.
⦁ மார்ச் 6, 2023 – ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர்.
⦁ மார்ச் 21, 2023 – ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.
⦁ மார்ச் 23, 2023 – ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றம்.
⦁ ஏப்ரல் 10, 2023 – ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்