30.6 C
Chennai
April 19, 2024
தமிழகம் செய்திகள்

திருச்செந்தூரில் 2-வது நாளாக உள்வாங்கிய கடல் – பக்தர்கள் அதிர்ச்சி!

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியதால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்தமான், நிக்கோபார் தீவுகளில் நேற்று அடுத்தடுத்து நான்கு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடல் பகுதி நேற்று காலை 9 மணியளவில் சுமார் 200 அடி உள்வாங்கியது. பின்னர் மதியம் 1 மணி அளவில் கடல் இயல்பு நிலை திரும்பியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்தநிலையில், 2-வது நாளாக இன்றும் கடல் சுமார் 50 அடி  உள்வாங்கி காட்சி அளித்தது. இதனால் கடல் பாறைகள் வெளியே தெரிந்தன. இந்நிலையில் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் திருச்செந்தூர் கடல் பகுதி உள்வாங்குவதும், இயல்பு நிலை திரும்புவது வழக்கமாக இருந்து வந்தது. இதை அடுத்து தொடர்ந்து இரண்டாவது நாளாக கடல் உள்வாங்கியதால்  பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதற்கிடையே வங்க கடலில் நான்கு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை என புவியியல் மையம் தெரிவித்திருக்கிறது.

—கோ. சிவசங்கரன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading