விடுமுறை தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குவிந்தனர்.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. இந்நிலையில், குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலி அருவி ஆகியவற்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டனர். சுற்றுலா பயணிகளின் அதிகளவில் வந்திருந்ததால், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில், சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர்ஜ திற்பரப்பு அருவியில் ஆனந்தமாக குளியலிட்டு மகிழ்ந்தனர். மேலும், அங்குள்ள சிறுவர் பூங்காவில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டனர். அருவியின் மேற்பகுதியில் கோதையாற்றில் அமைக்கப்பட்டுள்ள படகு துறையில், சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர்.
தென்காசி மாவட்டத்தில், குண்டாறு அணை அருகேயுள்ள நெய்யருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குற்றாலத்திற்கு அடுத்தபடியாக நெய்யருவிக்கு விடுமுறை தினங்களில் வருகை தருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இங்கு வந்த சுற்றுலா பயணிகள் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. நெய்யருவி பகுதியில் பாதுகாப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா