34.4 C
Chennai
May 14, 2024
இந்தியா பக்தி செய்திகள்

மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர விளக்கு பூஜைகளையொட்டி நாளை நடை  திறக்கப்படவுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது.  41 நாட்கள் மண்டல காலம் நிறைவுப் பெற்று புதன் கிழமையன்று நடை மூடப்பட்டது.  இந்நிலையில் நாளை மகர விளக்கு பூஜைக்காக நடை மீண்டும் திறக்கப்படுகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஜனவரி 15-ம் தேதி மகர விளக்கு பூஜைகள் நடைபெறும்.  அன்று மாலை 6.30 மணிக்கு மகர ஜோதி தரிசனம் செய்யப்படும்.  தொடர்ந்து ஜனவரி 19-ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி காலையில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி தரிசனத்திற்கு பின்னர் கோயில் நடை அடைக்கப்படும்.  அன்றுடன் நடப்பு ஆண்டு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவுபெறும்.

நாளை மறுநாள் முதல் வழக்கமான பூஜைகள் நடைபெறும். மண்டல பூஜை சமயத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை போன்று மகரவிளக்கு பூஜைக்கும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading