நைஜீரியாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதில், அவரது மரபணுவில் ஒமிக்ரான் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 41 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இரண்டு நாட்களுக்கு முன்பு, நைஜீரியாவில் இருந்து வந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரது மரபணுவில் மாற்றம் உள்ளதால், ஒமிக்ரான் இருப்பதாக சந்தேகிக்கபப்டுவதாகவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, அவர் குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கும் எஸ்-ஜீன் குறைவாக இருப்பதாகவும், அவர்களுக்கு ஒமிக்ரான் இருக்க வாய்ப்புள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.