கல்வி நிறுவன வளாகங்களில் ஹிஜாப் அணிய தடையில்லை என்றும், வகுப்பறைக்குள் மட்டும ஹிஜாப் அணியக்கூடாது என்றும் கர்நாடகா அரசு தரப்பில் பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது கர்நாடகா அரசு வழக்கறிஞர் முன் வைத்த வாதத்தில், கல்வி நிறுவனங்களின் வளாகங்களுக்குள் ஹிஜாப் அணிய எந்தவித தடையும் இல்லை என்று கூறினார்.
மேலும், வகுப்பறைக்குள் மட்டுமே ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கர்நாடகா கல்வி நிறுவனங்கள் வகைப்பாடு மற்றும் பதிவு விதிகள் சட்டத்தில் விதி 11-ல் குறிப்பிட்ட தலைகவசத்தை அணிவது குறித்து உரிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கர்நாடகா அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேலும், ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்துவது, அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று தெரிவித்த அவர், ஹிஜாப் அணியலாமா, வேண்டாமா என்ற முடிவை சம்பந்தப்பட்ட பெண்களிடம் விட்டு விட வேண்டும் என்று கர்நாடகா அரசு வழக்கறிஞர் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








