நீலகிரி மலைக் கிராமங்களில் வசிக்கும் படுகர் இன மக்களைத் தனி பழங்குடியினர் சமூகமாகக் கணக்கிட வேண்டும் மத்திய அரசுக்கு நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா கடிதம் எழுதியுள்ளார்.
நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.இராசா மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தனது தொகுதியிலிருந்து நீலகிரியில் உள்ள படுகர் சமூகத்தின் குறிப்பை இணைக்கிறேன், படுகர்களைத் தனி பழங்குடி சமூகமாகக் கணக்கிட வேண்டும் என்றும், முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பில் தவறாக நடந்ததைப் போல அவர்களைக் கன்னடர்கள் என்று வகைப்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அண்மைச் செய்தி: ‘ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை; விவசாயிகள் அச்சம்!’
மேலும், வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் படுக மொழியைத் தனி மொழியாகவும், பேச்சு மொழியாகவும் கணக்கிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளின் மேற்கண்ட உண்மையான மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்குத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தயவுசெய்து அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக அவர் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.