தேமுதிக யாருடன் கூட்டணி? நாளை இறுதி முடிவுக்கு வாய்ப்பு!

தேமுதிக  உயர்மட்ட குழு ஆலோசனை நாளை நடைபெறவுள்ள நிலையில்,  கூட்டத்தில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில்…

தேமுதிக  உயர்மட்ட குழு ஆலோசனை நாளை நடைபெறவுள்ள நிலையில்,  கூட்டத்தில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.  முக்கிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை ஏற்கனவே தொடங்கிவிட்டன.

இதனிடையே மறைந்த நடிகர் மற்றும் அரசியல்வாதியான விஜயகாந்த் கட்சியான தேமுதிக இந்த தேர்தலை எவ்வாறு கையாள போகிறது என பல கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளன.  இந்நிலையில்,  கூட்டணி குறித்த ஆலோசனை கூட்டம் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நேற்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் கூட்டணி குறித்து முடிவு எடுக்க பிரேமலதா விஜயகாந்த்திற்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து,  தேமுதிக  உயர்மட்ட குழு ஆலோசனை நாளை நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தேமுதிக கூட்டணி குறித்து ஆலோசிக்க கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உயர்மட்ட நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  கூட்டணி குறித்து நாளை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவைத் தலைவர் இளங்கோவன்,  கட்சியின் துணைப்பொது செயலாளர்கள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் நாளை நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.  ஏற்கனவே நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் 14 மக்களவை தொகுதி,  1 மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கும் கட்சியுடன் தான் கூட்டணி என பிரேமலதா அறிவித்துள்ள நிலையில் நாளை உயர்மட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.