முக்கியச் செய்திகள் தமிழகம்

இரவில் உலா வரும் சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

இரவு நேரத்தில் உலா வரும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினரால் கூண்டு
வைக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டு பட்டறை அருகே உள்ள அம்பிகாபுரம் கிராமத்தில்
கடந்த ஒரு வாரமாக இரவு நேரத்தில் நாள்தோறும் கிராமத்துக்குள் நுழைந்து குடியிருப்புகளை நோட்டமிடும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் அந்தப் பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.  தற்போது அந்தப் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வரவழைக்கப்பட்டு அந்த  கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் சிறுத்தை பிடிபட்டுவிடும் என்று வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

‘7 மண்டலங்களில் இயங்கும் ரயில் எஞ்ஜின் பெட்டிகளில் கழிப்பறை இல்லை’

Arivazhagan Chinnasamy

நிலக்கரி பற்றாக்குறை -தேவையற்ற அச்சம்; மத்திய அமைச்சர்

Halley Karthik

திவான் பகதூர் ரெட்டமலை சீனிவாசன் கதை

Arivazhagan Chinnasamy