சென்னை ஆலந்தூர் சுற்றுவட்டார பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருள் விற்பனை செய்த நைஜீரியா நாட்டு பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது
செய்து கடும் நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டு உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனி படைகள் அமைக்கப்பட்டு
கஞ்சா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஆலந்தூர் அடுத்த பழவந்தாங்கல் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட
பகுதிகளில் சிலர் போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக காவல் ஆய்வாளருக்கு
ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பெயரில் தனிப்படை போலீசார் மூவரசன் பேட்டை குளக்கரை அருகே ரகசியமாக கண்காணித்து வந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திடமாக நின்று கொண்டிருந்த பெண்ணிடம் விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை காவல் நிலையம் அழைத்து சென்று சோதனை செய்தபோது எம்டி மெத்தம்பெட்டமைன் என்கிற வகையை சார்ந்த போதைப் பொருளை பதுக்கி வைத்திருந்து தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நவபர் ஓனினியே மோனிகா (வயது 32) என்பதும் சென்னை தரைமனி ஸ்ரீராம் நகரில் தங்கி இருந்து போதைப் பொருள்களை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து அவரிடம் இருந்து சுமார் 61 கிராம் எம்டி மெத்தம் பெட்டமைன் என்கிற
போதை பொருளையும், 33 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும், ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜப்படுத்தி நைஜிரியா நாட்டுப் பெண்ணை சிறையில் அடைத்தனர்.