சென்னையில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி கடல் அருகே நிலைகொண்டிருக்கும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக நேற்று மாலை முதல் தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.
தமிழக மலைப் பகுதிகள் மற்றும் உள் மாவட்டங்களில் இன்றும் பரவலாக மிதமான மழை இருக்கும் என்றும் மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.







