நியூஸ் 7 தமிழ் சார்பில் கோவையில் இரண்டாவது ஆண்டாக மிகப் பிரம்மாண்டமான முறையில் கல்வி கண்காட்சி நடைபெற்று வருகிறது.
மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் நியூஸ் 7 தமிழ் சார்பில் கல்விக் கண்காட்சி கடந்த ஆண்டு கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்றது. கடந்த ஆண்டு ஜூன் 18, 19 ஆகிய தேதிகளில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கல்வி கண்காட்சி நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் 40-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் அரங்குகள் அமைத்திருந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அப்போது, உடனடி வேலைவாய்ப்புக்கான படிப்புகள், எந்த கல்லூரியை தேர்ந்தெடுக்கலாம் என்பன உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு பிரபல கல்லூரிகளின் பேராசிரியர்களும், கல்வியாளர்களும் விளக்கமளித்தனர். மேலும், மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியில் உடனடியாக சேருவதற்காகான வசதியையும், வங்கிகளில் கல்விக்கடன் பெறும் வாய்ப்பையும் கல்வி கண்காட்சி வாயிலாக நியூஸ் 7 தமிழ் ஏற்படுத்தி தந்தது.
இதையும் படியுங்கள் : பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்…..
இதே போல் இந்த ஆண்டும் கோவை கொடிசியாவில் நியூஸ்7 தமிழ் சார்பாக கல்விக் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதன்படி இன்று இந்த கல்விக் கண்காட்சி கோலாகலமாகத் தொடங்கியது. இன்று நடைபெறும் தொடக்க விழா நிகழ்ச்சியில் பேராசியர் முனைவர் கு.ஞானசம்மந்தன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களாக பார்க் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் சிஇஓ அனுஷா ரவி, பெஸ்ட் கல்வி அறக்கட்டளை செயலாளர் அப்துல் ரஷீத், மனிதவளம் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சியாளர் திருக்கோஷ்டியூர் மணிகண்டன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கல்விக் கண்காட்சியில், சுமார் 40க்கும் மேற்பட்ட முன்னணி கல்லூரிகள் பங்கேற்கின்றன. இங்கு மாணவ, மாணவிகளுக்கு ஸ்பாட் அட்மிஷன் மற்றும் கல்வி உதவித்தொகை கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் உயர்கல்வி ஆலோசகர்கள் பங்கேற்று மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்க உள்ளனர். இந்த கண்காட்சியில் பங்குபெறும் மாணவர்களில், சிறந்த மதிப்பெண்களைப் பெறுவோருக்கு, அவர்களின் உயர்கல்விக்காக, நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு அரை மணி நேரத்துக்கும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் ஐந்து பேருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த கண்காட்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளனர்.