பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் நிகரென கொள் விழிப்புணர்வு இயக்கத்தை நியூஸ் 7 தமிழ் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, குறிஞ்சிப்பாடியில் உள்ள குறிஞ்சி பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர்கள் பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றனர்.
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு நியூஸ் 7 தமிழ் சார்பில் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில், ”நிகரென கொள்-2023” என்ற தலைப்பில் விழிப்புணர்வு இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை வலியுறுத்தி மார்ச் மாதம் முழுவதும் இந்த விழிப்புணர்வு இயக்கத்தை முன்னெடுக்கவுள்ள நியூஸ் 7 தமிழ், மாநிலம் முழுவதும் கையெழுத்து இயக்கம், கருத்தரங்கம், உறுதிமொழி ஏற்பு போன்ற நிகழ்வுகளை நடத்துகிறது. இதற்கான தொடக்க விழா நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள நியூஸ் 7 தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் உயர் அலுவலகங்களிலும் பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் ‘நிகரென கொள்வோம்’ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் உள்ள குறிஞ்சி பாலிடெக்னிக் கல்லூரியில் நியூஸ் 7 தமிழின் நிகரென கொள்வோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலின சமத்துவத்தின் தேவை குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். இதைத்தொடர்ந்து 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாலின சமத்துவ உறுதி மொழி ஏற்றனர்.
இதையடுத்து நடைபெற்ற மாதவிடாய் கையெழுத்து இயக்கத்திலும் கலந்துகொண்டு, அதற்கும் முழு ஆதரவு தெரிவித்து அனைவரும் கையெழுத்திட்டனர். அப்போது நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கல்லூரி முதல்வர் ராஜா அரங்கநாதன், நியூஸ் 7 தமிழின் சீரிய முன்னெடுப்பு சமூகத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாராட்டினார்.
இதேபோல் புதுக்கோட்டை பெருமாநாட்டில் உள்ள சுதர்சன் கலை அறிவியல் கல்லூரியில் நியூஸ் 7 தமிழின் நிகரென கொள்வோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலின சமத்துவத்தின் தேவை குறித்து மாணவர்களுக்கு ஆசிரியர்கள் எடுத்துரைத்தனர். இதைத்தொடர்ந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாலின சமத்துவ உறுதி மொழி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து நடைபெற்ற மாதவிடாய் கையெழுத்து இயக்கத்திலும் கலந்துகொண்டு, அதற்கும் முழு ஆதரவு தெரிவித்து அனைவரும் கையெழுத்திட்டனர்.
- பி.ஜேம்ஸ் லிசா










