நியூஸ் 7 தமிழ் சார்பில் நடைபெற்று வரும் கல்வி கண்காட்சி உயர் கல்வி வழிகாட்டி இரண்டாவது நாளில் சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சிவக்குமார் கண்காட்சியில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டார்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் விதமாக நியூஸ் 7 தமிழ் பிரமாண்ட கல்விக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கோவையில் இரண்டு ஆண்டுகளாக நியூஸ் 7 தமிழ், கல்வி கண்காட்சியை நடத்தியது. இந்தாண்டு சேலம் மூவேந்தர் அரங்கத்தில் நடைபெறும் கண்காட்சியிலும், 20-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மேலும், தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கல்விக்கடன் பெறுவதற்கான அரங்குகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இந்த கண்காட்சியில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, பயன்பெற்று வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில், சேலம் மாவட்டம் மூவேந்தர் அரங்கில், இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் உயர் கல்வி வழிகாட்டி கல்வி கண்காட்சியில், சேலம் மாவட்ட கண்காணிப்பாளர் சிவக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு, கண்காட்சியில் அமைக்கப்பட்ட அரங்குகளை பார்வையிட்டார்.
இதனைத்தொடர்ந்து, நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மருத்துவம், பொறியியல் தாண்டி கல்விக் கண்காட்சியில் வேலை வாய்ப்பு தரக்கூடிய படிப்புகள் என்னென்ன உள்ளது போன்றவை இடம் பெற்றுள்ளது. மாணவர்கள் என்ன திறமை உள்ளதோ, அதனை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். +2 படித்தவர்களுக்கு ஏராளமான வாய்ப்பு உள்ளது. சரியான நேரத்தில் நியூஸ் 7 தமிழ் இந்த கல்வி கண்காட்சியை நடத்தி உள்ளது.
காவல்துறை அதிகாரியாக இருப்பதற்கு + 2 படித்தால் காவலர் ஆகலாம். பட்டம் படித்தால் எஸ்.ஐ ஆகலாம், பட்டம் படித்தால் டி.எஸ்.பி ஆகலாம். இந்திய அளவில் ஐ.பி.எஸ்.ஆகலாம். இந்த தேர்வுக்கு எல்லாம் போட்டி தேர்வு, உடல் தகுதி, பொது அறிவு ஆகியவை அவசியம். காவல்துறை பணிக்கான தேர்வு நடைபெற்று வருகின்றன. தற்போது காவல்துறைக்கும், பொதுமக்களுக்கு உள்ள ரேஸ்யோ குறைவாக உள்ளது.
தற்போது காவல்துறையில் பணி புரிவதத்காக ஒவ்வொரு ஆண்டும் ஆட்கள் எடுப்பட்டு வருகின்றன. நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி நெருக்கடி இல்லாத சமயத்தில் அனைவரும் கல்வி கண்காட்சியை பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்துள்ளீர்கள். மாணவர்கள் அவர்களுக்கு தேவையான படிப்பை தேர்ந்தெடுத்து பயன் படுத்த வேண்டும் என்று எஸ்.பி. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா