செங்கல்பட்டு அருகே பள்ளிக் குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாக குழந்தைகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து முடிக்கும் மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்துவது வழக்கம். ஆனால் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த செய்யூரில் இயங்கி வரும் லயோலா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், சிறு குழந்தைகளை ஊக்குவிக்கும் விதமாகவும், தொலைநோக்கு பார்வையோடு கல்வியில் உயர வழிகாட்டும் பொருட்டு, எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி படிக்கும் மழலையர்களுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதையும் படியுங்கள் : கேரளா : இருசக்கர வாகனத்தில் வந்த பள்ளி மாணவர் பேருந்திற்கு அடியில் சிக்கி உயிரிழப்பு
கலை நிகழ்ச்சிகளுடன் துவங்கிய பட்டமளிப்பு விழாவில் புதுச்சேரி மாநில பாரா ஒலிம்பிக் கமிட்டி தலைவர் சந்தோஷ் குமார் கலந்து கொண்டு, பள்ளி மழலையர்களுக்கு பட்டமளித்து வாழ்த்து தெரிவித்தார். பட்டமளிப்பு விழாவில் 48 பள்ளி குழந்தைகளுக்கு பட்டமளிக்கப்பட்டன. இறுதியாக பள்ளி மாணவர்கள் மூலம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்த பட்டமளிப்பு விழாவில் ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
– கோ. சிவசங்கரன்.







