புதிய அரசு மகப்பேறு மருத்துவமனை; முதலமைச்சர் திறந்து வைப்பு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவமனையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தென்மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான…

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப்பிரிவு மருத்துவமனையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தென்மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று
சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பின்னர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள திட்டங்குளம் தீப்பெட்டி தொழிற்சாலையினை பார்வையிட்டு ஆய்வு செய்து தொழிற்சாலை ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், புதிதாக கட்டப்பட்டுள்ள ரூ.10.50 கோடி மதிப்பிலான மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு கட்டடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இக்கட்டடத்தில், நவீன வசதிகளுடன் மருத்துவர் அறை, பதிவறை, அவசர சிகிச்சை, நோயாளிகள் காத்திருக்கும் அறை, மருந்தகம், முதல் தளத்தில், 44 படுகைக்களுடன் ஒரு அறுவை சிகிச்சை அறை, இரண்டாம் தளத்தில், 44 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சை பிரிவுடன் 2 அறுவை சிகிச்சை அறை அமைந்துள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், கே.என் நேரு,  கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ். தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட குழு துணை தலைவர் மகாலட்சுமி சந்திரன், நகர செயலாளர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.