நேபாள பெருவெள்ளம் – உயிரிழப்பு எண்ணிக்கை 626ஆக அதிகரிப்பு!

பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626-ஆக உயர்ந்துள்ளது.

நேபாளத்தில் உள்ள ராசுவா மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள போடே கோஷி ஆற்றில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காலை சுமார் 8:30 மணியளவில் பனிப்பாறைச் சரிவு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள், பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள், வாகனங்கள் என அனைத்தும் சேதமடைந்தன. வெள்ளப்பெருக்கு காரணமாக, வாகனப் போக்குவரத்திற்கு ஏற்ற 19 பாலங்களும், 40 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளும் சேதமடைந்துள்ளன.

இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, தமிழ்நாட்டில் இருந்து கைலாஷிற்கு சுற்றுப்பயணம் சென்று வெள்ளத்தில் சிக்கிய 57 பேர் மீட்கப்பட்டு நள்ளிரவில் சென்னை வந்தடைந்தனர். மீதமுள்ளவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 626-ஆக உயர்ந்துள்ளது. மேலும், 2,500-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.