நெல்லையப்பர் திருக்கோயில் ஆனி மாத சிவராத்திரி – ஏராளமானப் பக்தர்கள் பங்கேற்பு!

நெல்லை, தச்சநல்லூர் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனி மாத சிவராத்திாியும் கடைசி சனிக்கிழமையுமான பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நெல்லை, தச்சநல்லூர் ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள…

நெல்லை, தச்சநல்லூர் அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் ஆனி மாத
சிவராத்திாியும் கடைசி சனிக்கிழமையுமான பிரதோஷ வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை, தச்சநல்லூர் ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுவாமி நெல்லையப்பர்காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும்  பல்வேறு விழாக்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக மாத பிரதோஷம் சிறப்பாக நடத்தப்படுகிறது.

ஆனி மாத சிவராத்திாியும் கடைசி சனிக்கிழமையுமான நேற்று மூலவா் சன்னதிமுன் அமைந்துள்ள நந்தியெம்பெருமானுக்கு மஞ்சள், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், அரிசி
மாவு, திரவியப்பொடி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம்நடைபெற்றது.

தொடா்ந்து சந்தனத்தாலும், மலா்களாலும் அலங்காிக்கப்பட்ட நந்தியெம்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. முன்னதாக நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ஆகியோருக்கு அபிஷேகங்கள் நடைபெற்றது .

பின்னர் பிரதோஷநாதா் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளச் செய்து கோவில் பிரகாரத்தில் வீதி உலா நடைபெற்றது. காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு  நிறைவாக நந்தியெம்பெருமானுக்கு அா்ச்சனையுடன் கோபுர ஆரத்தி கற்பூர ஆரத்தி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ரெ. வீரம்மாதேவி

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.