நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தசர்மிளா என்ற கல்லூரி மாணவி, ஒரே நேரத்தில் இரண்டு கைகளால் 12 திருக்குறள்களை எழுதி சாதனை படைத்துள்ளார்.
நெல்லை சுத்தமல்லி பாரதி நகர் பகுதியில் எண்ணெய் ஆலை நடத்தி வரும் சீனிவாசன் மற்றும் சரஸ்வதி தம்பதியின் மகளான சாந்தசர்மிளா, கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு இரண்டு கைகளால் எழுதும் அசாத்திய திறமையுள்ளது. குறிப்பாக, ஒரே நேரத்தில் இரண்டு கைகளைப் பயன்படுத்தி, 12 திருக்குறள்களை 5 நிமிடத்தில் எழுதி சாதனை படைத்துள்ளார். இத்திறமையால் உலக அளவில் சாதனைகளைய படைத்து பல பதக்கங்களையும் பெற்றுள்ளார்.
கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதை தனது அடுத்தக்கட்ட இலக்காக கொண்டுள்ள இவர், தீவிரமாக இரண்டு கைகளால் எழுதி பயிற்சி எடுத்து வருகிறார்.
மேலும் தனக்கு இருக்கும் இந்த திறமையை மற்ற மாணவர்களுக்குக் கற்றுக் கொடுக்க தயாராக இருப்பதாகவும் சாந்தசர்மிளா தெரிவித்துள்ளார். இரு கைகளால் திருக்குறள் எழுதும் இந்த நெல்லை சாதனையார் சாந்தசர்மிளாவின் பதக்களை, தமிழக முதல்வர் அணிவித்து பாராட்ட தாங்கள் ஆவலாக காத்திருப்பதாக அவரின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
—சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.