நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் லோக் அதாலத் குறித்து பொதுமக்களிடையே நீதிபதி
துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குத்தரப்பினர், முரண்பாடுகளை நேரடியாக சமரசர் முன்னிலையில் பேசி சுமூகமான தீர்வு ஏற்படுத்தும் விதமாக லோக் அதாலத் மூலம்
வழக்குகளுக்கு தீர்வு காணப்படுகிறது. இதனை பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி
ஆனந்த் மற்றும் வழக்கறிஞர்கள் அரசு பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியும், பயணிகளிடம் மற்றும் வியாபார பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கியும்
விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
அதில் லோக் அதலாத் வாயிலாக வழக்குகளுக்கு சுமூகமாக தீர்வு காணப்பட்டால் முழு கட்டணத்தை நீதிமன்றம் திரும்பப் பெறுவதுடன், பிரச்னைகளை விரைவாகக் கையாண்டு, கட்டணம் இல்லாமல் தீர்வுகளைப் பெற முடியும். சமரச மையத்தில் நடக்கும் அனைத்துப் பேச்சு வார்த்தைகள், எந்த வகையிலும் பதிவு செய்யப்படுவதில்லை. மேலும் பேச்சுவார்த்தைகள் ஒருவருக்கு எதிராகச் சாட்சியங்களாகப் பயன்படுத்துவதில்லை.
எளிய முறையில் துரிதமாகவும், பணம் விரயமின்றியும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தீர்வுகளை பெறுவதற்கு சமரசம் உதவுகிறது. இதனால் சமரசத்தில் இரு தரப்பினருக்கும் வெற்றி என்ற நிலைப்பாடு ஏற்படும். மையத்தில் காணப்படும் தீர்வு இறுதியானது என்பதால் இதற்கு மேல் முறையீடு கிடையாது, என்பது போன்ற
விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது.
—ரெ.வீரம்மாதேவி







