என்.சி.எல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில், ஶ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமத்தை 45 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி அபார வெற்றி பெற்றது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், கோவை மண்டலத்தில், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும அணியும், பண்ணாரி அம்மன் கல்லூரி அணியும் மோதிக்கொண்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : NCL 2023 : பி.எஸ்.என்.ஏ கல்லூரியை வீழ்த்தி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வெற்றி
இதில் டாஸ் வென்ற ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழும அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லூரி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக முத்துவேல் 40 பந்துகளில் 42 ரன்கள் மற்றும் அந்த அணியின் கேப்டன் வேத் பிரகாஷ் 18 பந்துகளில் 31 ரன்கள் விளாசினர்.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஶ்ரீ கிருஷ்ணா கல்லூரி, துவக்கத்தில் நல்ல ரன் ரேட்டில் விளையாடினாலும், பவர் பிளே ஓவர்களுக்கு பின்பு அடுத்தடுத்து விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இறுதியில் 18.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 114 ரன்கள் மட்டுமே அந்த அணி எடுத்தது.
இதன்மூலம் பண்ணாரி அம்மன் கல்லூரி 45 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய பண்ணாரி அம்மன் கல்லூரியின் சஞ்சய் குமார் 4 ஓவர்கள் வீசி, 14 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.