என்.சி.எல் கிரிக்கெட் தொடரில், தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி வெற்றி பெற்றது.
நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் என்.சி.எல் 2023 மண்டல அளவிலான டி20 கிரிக்கெட் தொடர் தமிழ்நாடு முழுவதும் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நெல்லை மண்டலத்தில் இன்று நடைபெற்ற போட்டியில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணியும் தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரி அணியும் மோதின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படியுங்கள் : NCL 2023 : மதுரை தியாகராஜர் கல்லூரியை வீழ்த்தி மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி வெற்றி
இதில் டாஸ் வென்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தூத்துக்குடி வஉசி பொறியியல் கல்லூரி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு நூறு ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அணியின் பிரபாகரன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.