நாளை வெளியாகும் விடுதலை பாகம் 1; படத்தை பற்றி சூரி தெரிவித்த சுவாரஸ்ய தகவல்!!!

நாளை  வெளியாகவுள்ள விடுதலை திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிப் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தை பற்றி சூரி சமீபத்தில் சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.  அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை…

நாளை  வெளியாகவுள்ள விடுதலை திரைப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிப் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் படத்தை பற்றி சூரி சமீபத்தில் சுவாரஸ்ய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். 

அசுரன் திரைப்படத்திற்குப் பின் விஜய் சேதுபதி, சூரியை வைத்து ‘விடுதலை’யை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு விடுதலை திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த, கதை முழுமையாகச் சினிமா ரசிகர்களைச் சென்றடைய வேண்டும் என்று வெற்றி மாறன் விரும்பியதால் 2 பாகங்களாக இப்படத்தை வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் பல புதிய படங்களைத் தயாரித்தும், வெளியிட்டும் வருகிறது. அந்த வகையில் இந்த பாடத்தையும் இன்போடைமெண்ட் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வழங்குகிறது.

சத்தியமங்கலம், ஈரோடு உள்ளிட்ட வனப் பகுதிகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக விடுதலை படப்பிடிப்பு நடத்தப்பட்டது. வழக்கமாகக் காமெடியனாக நடிக்கும் சூரி, இந்தப் படத்தில் போலீசாகவும், கைதியாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். விடுதலை முதல் பாகத்திற்கான படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

நாளை வெளியாகவுள்ள இப்படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் படத்தின் ப்ரோமஷனுக்காக படக்குழு பரபரப்பாக வேலை செய்து வரும் நிலையில், நடிகர் சூரி படத்தை பற்றி பேட்டி ஒன்றில் தெரிவிக்கையில், படத்தில் தான் கதாநாயகன் இல்லை என்றும் கதையின் நாயகன் என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.