மார்ச் 21- ம் தேதி விண்வெளியில் இருந்துவரும் சிறுகோள் ஒன்று பூமியை கடந்து செல்ல உள்ளதாக நாசா விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
பூமியிலிருந்து இருபது லட்சம் கிலோமீட்டர் தொலைவில் இக்கோள் மார்ச் 21-ம் கடந்துசெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறுகோளுக்கு நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர் ( 2001 FO32) என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த சிறுகோள் ( 2001 FO32) பூமியை கடக்கும்போது மணிக்கு சுமார் 1,23,000 கிலோமீட்டர் வேகத்தில் கடந்து செல்லும். இதனால் பூமிக்கு எந்த பாதிப்பும் வராது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இச்சிறுகோள்ப்பற்றிய குறைந்த பட்ச தகவல்கள் மட்டுமே ஆய்வாளர்கள் திரட்டியுள்ளனர். பூமியை கடந்து செல்லும் தருணத்தில்தான் இக்கோள் பற்றிய முழுமையான தகவல் கிடைக்கும். சூரியக் கதிர்கள் இக்கோளின் மீதுபடும்போது வெளியாகும் பிரதிபலிப்பு இந்த சிறுகோளின் தன்மையை தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.







