அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு அதனை ஊக்குவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து உரையாற்றியனார். அப்போது பேசிய அவர், வேதியியல் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் மண்ணும்,நீரும் நச்சுத்தன்மை அடையும் என்பதால் அவற்றை தவிர்த்து இயற்கையான எருவை பயன்படுத்தி வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கையை வெளியிட்டதாக கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையும் படிக்கவும்: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்: LiveUpdates
அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் 10 ஆயிரம் ஹெக்டேருக்கு மானிய உதவி அளிப்பதற்காக வரும் ஆண்டில் 26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க சிறப்புத்திட்டம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்தார்.அங்கக வேளாண்மையில் நம்மாழ்வார் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அங்கக வேளாண்மையில் ஈடுபடுவதோடு அதனை ஊக்குவிக்கும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த விருதுடன் 5 லட்ச ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.