26.7 C
Chennai
September 24, 2023
தமிழகம் செய்திகள்

நாய்கள் இனப்பெருக்க மையத்தில் தீ விபத்து!

கோவை அருகே முறையான கட்டமைப்பு இல்லாமல் செயல்பட்டு வந்த  நாய்கள் இனப்பெருக்க மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 13 நாய்கள் உடல் கருகி உயிரிழந்தன.

கோவை வடவள்ளி வீரகேரளம் பகுதியில் தனியார் நாய்கள் இனப்பெருக்க மையம் செயல்பட்டு வரும் நிலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில்  ஏற்பட்ட தீ விபத்து என்ற நிலையில், அப்பகுதி முழுவதும் எரிந்து நாசமானது. இதனிடையே அவ்வழியாக  சென்ற நபர்கள் இது தொடர்பாக, இடத்தின் உரிமையாளருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பெயரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற இடத்தின் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்த போது அதில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 13 நாய்கள் உடல் கருகி உயிரிழந்திருந்தன.  படுகாயம் அடைந்த நாய்களை பாபு என்பவா்,  மீட்டு சிகிச்சைக்காக  கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் சென்றாா்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

கடன் தொல்லை காரணமாக பாலத்தில் இருந்து குதித்த நபர் – போலீசார் விசாரணை!

Web Editor

புளியந்தோப்பில் தரமற்ற முறையில் கட்டடம்: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

Gayathri Venkatesan

கிரிக்கெட் இல்லன்னா டென்னிஸ்… – மனம் திறந்த ருதுராஜ் கெய்க்வாட்

EZHILARASAN D