என்னுடைய உண்மையான உழைப்பே ‘தங்கலான்’ -நடிகை பார்வதி ஓபன் டாக்!

அன்பை விட, பணத்தை விட, புகழைக் காட்டிலும் உண்மையான உழைப்பை காட்டும் வகையில் ‘தங்கலான்’ படத்தில் நடித்திருப்பதாக நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம்…

அன்பை விட, பணத்தை விட, புகழைக் காட்டிலும் உண்மையான உழைப்பை காட்டும் வகையில் ‘தங்கலான்’ படத்தில் நடித்திருப்பதாக நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விக்ரம் நடிக்கும் திரைப்படம் தங்கலான். பெரும் பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படத்தை ஸ்டியோ கீரின் நிறுவனம் மற்றும் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்து வருகிறது. இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ, ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. தங்கலான் திரைப்படம், கோலார் தங்க வயல் மற்றும் அதனைச் சுற்றி உள்ள பகுதிகளில் நடக்கும் நிகழ்வுகளை பற்றி விவரிப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு 50% நிறைவடைந்த நிலையில், இதற்கான இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்றது. படப்பிடிப்பு ஒத்திகையின்போது நடிகர் விக்ரமிற்கு காயம் ஏற்பட்டு விலா எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், நடிகை பார்வதிக்கான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நடிகை பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் ”ஒரு அன்பான நண்பர் சமீபத்தில் ‘அன்பை விட, பணத்தை விட, புகழைக் காட்டிலும் எனக்கு உண்மையைக் கொடு’ என்ற மேற்கோளை எனக்கு அனுப்பினார். தங்கலான் படத்தில் பணிபுரிந்த அனுபவத்துடன் நான் இந்த மேற்கோளை ஒப்பிட்டு பார்க்கிறேன். என் சுவர்களும் முகமூடிகளும் இந்த படத்தில் தூள் தூளாக இடிந்து விழுந்தன” என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.