தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் இஸ்லாமியர்களின் புனித இரவாக கருதப்படும் லைலத்துல் கத்ர் இரவை முன்னிட்டு ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகையானது உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், கடந்த மாதம் 23-ஆம் தேதி தமிழகத்தில் பிறை தெரிந்ததை முன்னிட்டு 24-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் நோன்பு கடைப்பிடித்து வருகின்றனர்.
இதுவரை 26 நாட்கள் நோன்பு கடைப்பிடித்து உள்ள சூழலில், 26-வது நோன்பில் இஸ்லாமியர்களின் புனித இரவாக கடைபிடிக்கப்படும் “லைலத்துல் கத்ர்“ என்ற புனித இரவை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பேட்டை பகுதியிலுள்ள காதர் மைதீன் பெரிய குத்தப்பா பள்ளிவாசலில் ஒன்று கூடி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த தொழுகையில், ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகை நடத்திய நிலையில், உலக நன்மைக்காகவும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
—ரூபி.காமராஜ்