36 C
Chennai
June 17, 2024
தமிழகம் செய்திகள்

உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு: 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு!

உதகை நகராட்சிக்குட்ப்பட்ட 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் எதுவும் முறையாக செய்யப்படவில்லை என அனைத்து உறுப்பினர்களும் குற்றம் சாட்டியதால் உதகை நகர மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
நீலகிரி  உதகை நகராட்சி அலுவலக மன்ற அரங்கில், மாதாந்திர நகர மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் வாணிஸ்ரீ தலைமையில், நகராட்சி ஆணையாளர் ஏகராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் முக்கிய பிரச்சினைகளான பாதாள சாக்கடை வசதி, கழிப்பிட வசதி, தெரு விளக்கு வசதி, நடைப்பாதை உள்ளிட்ட எவ்வித பணிகளும் முறையாக நடைபெறுவதில்லை எனவும், தற்போது வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வரும் இடங்களில் ஒப்பந்ததாரர்கள் முறையாக பணிகளை மேற்கொள்ளாமல் கால தாமதம் செய்து வருவதாகவும் குற்றச்சாட்டினர்.
அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் எழுந்து நின்று தங்களது குற்றச்சாட்டை முன் வைத்ததால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சுற்றுலா நகரமான உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் நிறுத்த முடியாததால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருவதாகவும், எனவே பார்க்கிங் வசதி செய்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், நகரில் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மத்திய அரசு நிதியின் கீழ் பசுமை திட்டம் என்ற அனுமதியை பெற்றுக் கொண்டு வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த வீடுகள் தற்போது எவ்வித அனுமதியின்றி காட்டேஜ்களாகவும், ரிசார்ட்டுகளாகவும் நடத்தி வருவதாகவும் நகர மன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் உதகை நகரின் மையப் பகுதியில் ஓடும் கோடைப்பந்து கால்வாயில் குப்பைகளை கொட்டுவதால் மழைக்காலங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து வருவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, உதகை நகர வார்டுகளில் ஆக்கிரமிப்பில் உள்ள சமுதாயக் கூடங்களை மீட்டு, அதனைப் புனரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், மேலும் 36 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் துணைத் தலைவர் ரவிக்குமார், ஜார்ஜ், தம்பி இஸ்மாயில் உள்ளிட்ட 36 வார்டு நகர மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading