கரூரில் அதிமுக வேட்பாளர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடக்கவுள்ள் நிலையில், தேர்தல் பரப்புரை இன்றுடன் முடிவடையவுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று காலை கரூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு பட்டாசுகள் வெடித்தும், ஆரத்தி எடுத்தும் மக்கள் வரவேற்பு அளித்தனர். தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரம், புதுத் தெரு, முல்லா தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் குறித்து எடுத்துரைத்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தியதால், எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் தன்னால் மக்களிடம் வாக்கு கேட்க முடிவதாகவும் எம்.ஆர். விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்தார்.







