அதிமுகவில் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்ற திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற மாநிலங்களவை அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், திமுக எம்.பி. கனிமொழியைப் பற்றி புகழ்ந்து பேசி இருந்தார். இதன் காரணமாக அ.தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பதவியில் இருந்து நவநீதகிருஷ்ணன் நீக்கப்படுவதாக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக அறிவிப்பு வெளியிட்டிருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ், தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது ஆட்டோவில் வந்த எம்.பி. நவநீதகிருஷ்ணன், ஓபிஎஸ் – இபிஎஸ்-ஐ நேரில் சந்தித்து தன்னுடைய விளக்கத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கடிதம் வாயிலாகவும் நவநீதகிருஷ்ணன் விளக்கம் அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைச் செய்தி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு சமவாய்ப்பு: பாமக தலைவர் ஜி.கே.மணி
இந்நிலையில், அதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நவநீதகிருஷ்ணனின் விளக்கத்தை அதிமுக தலைமை ஏற்குமா? இல்லையா என்பதனை காத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.