29.5 C
Chennai
April 23, 2024
முக்கியச் செய்திகள் கொரோனா செய்திகள்

தந்தையை இழந்த சோகத்திலும் நிவாரண நிதி வழங்கிய சிறுமி !


தந்தையை இழந்த சோகத்தால் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு எம்பி கனிமொழியிடம் 1970 ரூபாய் பணம் அழித்துள்ளார்  கோவில்பட்டியை சேர்ந்த சிறுமி ரிதானா.


தூத்துக்குடி கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்த சிறுமி ரிதானா, இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை நாகராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாரடைப்பால் காலமாகி உள்ளார். இந்நிலையில் தனது தாய் அமுதாவுடன் வாழ்ந்து வரும் ரிதானா தந்தை இருக்கும்போது அவர் வழங்கிய பணங்களை. தந்தையின் மருந்துவ செலவுக்காக 8540 ரூபாய் சேமித்து வைத்திருந்துள்ளார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் தந்தை மாரடைப்பால் கடந்த ஆண்டு இறந்துள்ளார். இந்நிலையில் தான் சேமித்து வைத்திருந்த ரூபாய்களைத் தனது தெரிந்த கஷ்டப்படுவர்களுக்கு வழங்கிவந்த ரிதானா. தற்போது கொரோனாவால் பலர் உயிரிழந்து வரும் நிலையில் இதை கண்ட ரிதானா “என்னை போன்று யாரும் பெற்றோரை இழக்கக்கூடாது” என்று எண்ணி இன்று கோவில்பட்டியில் குடும்பஅட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் 2000 ரூ வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த எம்பி கனிமொழியிடம் சிறுமி ரிதானா தான் தந்தையின் மருத்துவச் செலவிற்காக சேர்த்து வைத்திருந்த பணம் 1970 ரூபாயை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இந்த நிகழ்வு அனைவரையும் நெகிழ்வுடைய செய்துள்ளது. இதேபோல் இனாம்மணியாச்சி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவர் வெங்கடேஷ் அவர்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக 2 லட்ச ரூபாய் காசோலையைத் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களிடம் வழங்கினார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading