24 C
Chennai
December 4, 2023
முக்கியச் செய்திகள் இந்தியா

குளிர்கால கூட்டத்தொடரில் இளம் எம்.பி.க்களுக்கு அதிக வாய்ப்பு – பிரதமர் மோடி

முதல்முறை எம்.பி.க்கள், இளம் எம்.பி.க்கள் ஆகியோர் விவாதங்களில் பங்கேற்க அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அனைத்து கட்சியினரிடமும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், பிரதமர்
நரேந்திர மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது
பேசிய அவர், “ஜி-20 தலைமை பொறுப்பு இம்முறை இந்தியாவிடம் கிடைத்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த தலைமை பொறுப்பு கிடைத்துள்ளது மிகவும் முக்கியமானது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

உலக அளவில் இந்தியா தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து வருகிறது. இந்தியா மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. உலகளாவிய தளத்தில் இந்தியா தனது பங்களிப்பை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியா ஜி-20 தலைவர் பதவியை பெற்று இருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெறவுள்ளது ஒரு ராஜாந்திர நிகழ்வு மட்டுமல்ல. உலக அளவில் இந்தியா தன்னுடைய திறனை வெளிக்காட்ட கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு.

மேலும், நடைபெறும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில், தற்போதைய உலகளாவிய சூழ்நிலைகளுக்கு மத்தியில், நமது நாட்டை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கும், முன்னோக்கி கொண்டு செல்வதற்கான புதிய வாய்ப்புகளை மனதில் கொண்டும் முக்கியமான முடிவுகளை எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
அனைத்துக் கட்சியினரும், விவாதங்களுக்கு மதிப்பு கொடுப்பர் என நம்புகிறேன்.

முதல்முறை எம்.பி.க்கள், இளம் எம்.பி.க்கள் ஆகியோரின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும், ஜனநாயகத்தின் வருங்கால சந்ததியை தயார்படுத்தவும், விவாதங்களில் பங்கேற்கவும் அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

அவையில் ஏற்படும் கூச்சல் குழப்பத்தினால் அவை ஒத்தி வைக்கப்படுகிறது. இதன்
காரணமாக முறையாக விவாதங்கள் நடத்த முடியவில்லை என சமீப நாட்களாக
எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்கும் போதும், இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களை
சந்திக்கும் போதும் தெரிவித்து வருகிறேன். இதனை மனதில் வைத்து அனைத்து உறுப்பினர்களும், நாடாளுமன்றத்தில் செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy