39 C
Chennai
May 29, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

“சாதிவாரி கணக்கெடுப்புக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல” – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சாதிவாரி கணக்கெடுப்பிற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேரமில்லா நேரத்தில் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பேச வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு,  “இதுகுறித்து பல முறை பேசி இருக்கிறோம், மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தினால் மட்டுமே இங்கு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த முடியும்,  பாமகவின் கருத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக உள்ளனர்” என தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : மத்திய அரசால் முடக்கப்பட்ட விவசாயிகளின் சமூக ஊடகங்கள் | உடன்பாடு இல்லை என X தளம் ட்வீட்!

பாமகவினர் கோரிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;

” சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தெரிவித்து பாமக தலைவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ்,  ஜி.கே. மணி உள்ளிட்ட பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தன்னை நேரடியாக சந்தித்து பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர்.  சாதிவாரி கணக்கெடுப்பு கொள்கைக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை.  உங்களுக்கு சாதகமாகவே நடந்து வருகிறோம்.  மேலும், இந்த விளக்கத்திற்கு பின் பாமகவினர் என்ன முடிவெடுத்தாலும் அதற்கு எதுவும் கூற முடியாது”  இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading