தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையிலிருந்து மதுரை விமான நிலையம் வருகை தந்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது: தமிழக அரசின் தொடர் நடவடிக்கையால் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை என்ற மிகப்பெரிய வியூகத்தை தமிழகத்தில் கொரோனா முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருக்கிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு சில மாநிலங்களில் நோய் அதிகரிப்பை கவனித்துக் கொண்டு இருப்பதாக கூறிய அவர், தமிழகத்தில் தொடர்ந்து தடுப்பு மருந்துகள் கொடுக்கப்படுகிறது என்றும் மேலும் தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வருவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக குறைவு என மருத்துவர்கள் கூறியதைக் குறிப்பிட்டார்.
பிற மாநிலங்களில் நோய் அதிகரிப்பு உள்ளதால் தொடர்ந்து பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தடுப்பு மருந்து எடுத்துக் கொண்ட முன் களப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்ததாகவும் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறிய அவர், முன்பதிவு செய்துகொண்டு தடுப்பு மருந்துகளை பொதுமக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 50 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு விரைவில் தடுப்பு மருந்து கொடுக்கப்படும் என்றும் அதற்கான மருந்துகள் தமிழக அரசிடம் இருப்பு உள்ளது எனவும் தெரிவித்தார்.