உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் பற்றி என்ன தெரியும் என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
மொழிப்போர் தியாகிகள் தினத்தையொட்டி, மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலைக்கு, அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழலுக்காக 2 முறை கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி, என விமர்சித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலினுக்கு நிர்வாகத்தை பற்றி ஒன்றும் தெரியாது, என குறிப்பிட்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உதயநிதி ஸ்டாலின் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் என்றும் விமர்சனம் செய்துள்ளார். மேலும், ஜல்லிக்கட்டு முறைகேடு விவகாரம் தொடர்பான கேள்விக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் விசாரணை நடைபெற்று வருகிறது, என அமைச்சர் செல்லூர் ராஜு பதில் தெரிவித்தார்.