35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட ’ரி யூனியன்’ நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட மாணவரும் மாணவியும் தலைமறைவாகியுள்ளனர்.
கேராளாவில் எர்ணாகுளம் பகுதியில் உள்ள ஒரு பகுதியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்களும் மாணவிகளும் சமீபத்தில் சந்தித்துக் கொண்டனர். இதில் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவரும் இடுக்கி பகுதியை சேர்ந்த மாணவியும் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர்கள் இருவரும் பள்ளியில் படித்த காலத்தில் காதலித்தாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் இருவருக்கும் அவர்களின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். இருவரும் அவரது குடும்பத்துடன் வசித்து வந்தனர்.
அண்மைச் செய்தி : ஆஸ்கர் விருதை பணம் கொடுத்து வாங்கியுள்ளனர்? – பாலிவுட் மேக்கப் கலைஞரின் சர்ச்சை பேச்சு
இந்த நிலையில் வகுப்பு தோழர்கள் சேர்ந்து பள்ளியில் ‘ரி யூனியன்’ நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் எர்ணாகுளம் மாணவரும் இடுக்கி மாணவியும் கலந்து கொண்டனர். 50 வயதை நெருங்கி விட்ட வகுப்பு தோழர்கள் அணைவரும் தாங்கள் படித்த வகுப்பறையில் சந்தித்துக் கொண்டனர். இந்த ’ரி யூனியன்’ நிகழ்ச்சியின் முடிந்த போது இருவரும் பள்ளியில் இருந்து தலைமறைவாகியுள்ளனர்.
’ரி யூனியன்’ நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் வீடு திரும்பாததால் அவர்களின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.