மருத்துவ சீட் மோசடி; பல கோடி ரூபாய் ஏமாற்றிய தாய், மகள் கைது

சென்னையில் மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் ஏமாற்றிய தாய் மற்றும் மகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்…

சென்னையில் மருத்துவ படிப்பிற்கு சீட் வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் ஏமாற்றிய தாய் மற்றும் மகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சென்னை வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகலா வயது 63 இவருடைய மகள் ரம்யா வயது 34. இவர்கள் பல நபர்களிடம் எம்பிபிஎஸ் மற்றும் எம்எஸ் போன்ற மருத்துவ படிப்புக்கு சீட் வாங்கித் தருவதாகக் கூறி பல நபர்களை ஏமாற்றியுள்ளனர்.

இதில் ஜோசப் இளங்கோ என்பவர் அவருடைய மகளுக்குச் செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் எம் எஸ் படிப்பிற்கு அட்மிஷன் வாங்கி தருவதாகக் கூறி சசிகலா மற்றும் அவருடைய மகள் ரம்யா ஆகிய இரண்டு பேரும் ஆசை வார்த்தை கூறி ரொக்கமாகவும், காசோலை ஆகவும் சிறுக சிறுக 90 லட்சம் வரை வாங்கி உள்ளனர்.

ஆனால் இதுவரை மருத்துவ படிப்பிற்கான சீட் வாங்கித் தரவில்லை. இது தொடர்பாக ஜோசப் இளங்கோ காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். இதனிடையே சுந்தர் என்பவர் அவருடைய மகனுக்கு மருத்துவப் படிப்பு சீட்டான எம் பி பி எஸ் சீட் வாங்கி தருவதாகக் கூறி 28 லட்சம் ரூபாய் பணத்தை ரொக்கமாகப் பெற்றுள்ளார்கள்.  அவருக்கும் இதேபோன்று சீட் வாங்கி தராமல் தாயும் மகளும் ஏமாற்றியுள்ளனர்.

இது தொடர்பாக இவரும் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார்.  இந்த இரண்டு புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். அதன் பிறகுத் தாய் மற்றும் மகள் இரண்டு பேரும் போரூரில் இருப்பது காவல்துறைக்குத் தெரியவந்தது.

குறிப்பா குறிப்பாக இவர்கள் எத்தனை நபர்களை ஏமாற்றி இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. மேலும் மருத்துவ படிப்பிற்குச் சீட்டு வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் வரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது.

மேலும் இவர்கள் போரூர் பகுதியில் தலைமறைவாக இருப்பது காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரேவதி தலைமையிலான தனிப்படை காவல்துறை போரூர் பகுதிக்கு சென்று இரண்டு நபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.