காஞ்சிபுரம் கோயில்களில் சாமி தரிசனம் செய்த மொரீஷியஸ் ஜனாதிபதி

மொரீஷியஸ் நாட்டின் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் தனது மனைவியிடன் காஞ்சிபுரம் கோயில்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார். மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் மூன்று நாள் சுற்றுலா பயணமாக தமிழகம் வருகை புரிந்தார். முதல் நாள்…

மொரீஷியஸ் நாட்டின் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் தனது மனைவியிடன் காஞ்சிபுரம் கோயில்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.

மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் மூன்று நாள் சுற்றுலா பயணமாக
தமிழகம் வருகை புரிந்தார். முதல் நாள் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்டார். மேலும் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டு ரசித்தார்.

அதன்பின் கடற்கரை கோவிலின் இரு கருவறைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து படகு துறை, அகழி பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். கடற்கரை கோவில் சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு தன் குடும்பத்தினருடன் நின்று புகைப்படம்மும் எடுத்து கொண்டார்.

இரண்டாவது நாள் சென்னையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பின் இன்று
மூன்றாவது நாள் காஞ்சிபுரம் அதிகாலை 8 மணிக்கு காஞ்சி வரதராஜ பெருமாள்
கோவிலுக்கு வருகை புரிந்தார். அவரை வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி , சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

வரதராஜ பெருமாள் திருக்கோயில் பட்டர் கிட்டுஅய்யர் , மணியம் கிருஷ்ணன்,
ராகவன் உள்ளிட்டோர் திருக்கோயில் வரலாறு மற்றும் தாயார் சன்னதி, மூலவர்
வரதராஜ பெருமாள் ஆகிய சன்னதிகளை சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து தோஷம் நீக்கும் தங்க பள்ளியை வழிபட்டு கோயில் திருவிழா
மற்றும் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் உலகப் புகழ் பெற்ற கோயில் இட்லி அவருக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலுக்கு
வருகை புரிந்தார். அவரை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் நடராஜ சாஸ்திரி , கார்த்தி , மணியம் உள்ளிட்டோர் மேள தாளங்கள் முழங்க இரட்டைக் குடைகளுடன் வரவேற்று, காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டு பிரசாதங்களை வழங்கினர்.

ஜனாதிபதி வருகை ஒட்டி காஞ்சிபுரம் முழுக்க காவல்துறை சார்பில் 200க்கும்
மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருக்கோயில் சிறப்புகள் உடைய இடங்களில் நின்று தனது மனைவி மற்றும் அர்ச்சகர் உடன் மகிழ்ச்சியுடன் அழைத்து பல்வேறு இடங்களில் புகைபடம் எடுத்துக் கொண்டு, சிறப்பு விருந்தினர்கள் வருகைப் புத்தகத்தில் தனது வருகையை பதிவு செய்தார். மேலும் பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஏகாம்பரத நாதர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு சுப்பிரமணியசாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்தார்.

 

-பரசுராமன்.ப 
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.