இஸ்லாமிய விழா ஒன்றில் கலந்துகொண்ட பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் போலீஸார் தாக்கியதில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஜெருசலேமின் டமாஸ்கஸ் கேட் எனும் பகுதியில் இஸ்லாமிய விழா ஒன்றுக்காக பாலஸ்தீனியர்கள் நேற்று மாலை ஒன்றுகூடியுள்ளனர். அல் மிராஜ் எனும் அந்த விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது ஜெருசலேம் பகுதியை கைப்பற்ற வந்த இஸ்ரேல் காவல்துறையினர் அங்கிருந்தவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இவர்களை எதிர்த்து அங்கிருங்த பாலஸ்தீனியர்கள் கற்களை வீசி இஸ்ரேல் காவல்துறையினரை எதிர்த்து கோஷ்மிட்டனர்.
தொடர்ந்து கையெறி குண்டுகளை வீசியும், உயர் அழுத்த தண்ணீர் கேன்களை வெடிக்கச் செய்தும் பாலஸ்தீனியர்களை, இஸ்ரேல் போலீஸார் கலையச் செய்தனர். இரு தரப்பினரிடையெ நடந்த இந்த மோதலில் பலர் காயமடைந்துள்ளனர். பாலஸ்தீனியாவை சேர்ந்த சிறுமி ஒருவரையும் போலீஸார் கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக பேசிய இஸ்ரேல் போலீஸார் , நடந்த இந்த கலவரத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.







