முக்கியச் செய்திகள்இந்தியாகுற்றம்

ரூ.5 கோடி பணம் கேட்டு மஹிந்திரா ஷோரூம் ஊழியர்களிடம் கொள்ளையர்கள் மிரட்டல்! -12 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதால் பரபரப்பு!

மஹிந்திரா ஷோரூம் ஊழியர்களிடம் ரூ.5 கோடி பணம் கேட்டு மிரட்டிய அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஹரியானா மாநிலத்தின் ஹிசார் மாவட்டத்தில் மஹிந்திரா கார் ஷோரூம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹிசார் பகுதியில் உள்ள மஹிந்திரா கார் ஷோரூமில் நேற்று 3 கொள்ளையர்கள் நுழைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில், நேற்று மஹிந்திரா கார் ஷோரூமுக்கு வந்ந 3 கொள்ளையர்கள் தங்களுக்கு 5 கோடி ரூபாய் தர வேண்டும் என கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, கொள்ளையர்கள் கேட்ட தொகையை மஹிந்திரா கார் ஷோரூமில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள் தர மறுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளையர்கள், மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் 12 முறை சுட்டு மிரட்டி உள்ளனர்.

துப்பாக்கி சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த  ஷோரூம் ஊழியர்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், கொள்ளையர்கள் குறித்து ஷோரூம் ஊழியர்களிடம் விசாரணை செய்தனர்.  2 நபர்கள் முகத்தை வெள்ளைத் துணியால் மூடிக்கொண்டும்,  மேலும் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் ஷோரூம் வெளியில் இருந்தகாக ஊழியர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள் : மீண்டும் தொடங்கிய ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு – சுரேஷ் சந்திரா வெளியிட்ட அஜித்தின் மாஸ் வீடியோ!

இந்நிலையில், கடந்த வாரம் டெல்லி, ரஜோரி கார்டனில் உள்ள பர்கர் கிங் கடையில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட ஹிமான்ஷு பாவ் கும்பலுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். மஹிந்திரா கார் ஷோரூமில் நடைபெற்ற துப்பாக்கி சுடு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல்

EZHILARASAN D

’இலவச பயண திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை 61% ஆக உயர்வு’

Janani

மாணவர்களுக்கு காய்ச்சலை பரிசோதிக்க 389 நடமாடும் மருத்துவ வாகனங்கள்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading