சிம்பு நடிப்பில் உருவாகி நாளை ரீலீஸ் ஆக இருந்த மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் உருவான படம் மாநாடு. படத்தில், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்தப்படம் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு படம் நவம்பர் 25ம் தேதி வெளியாகும் என அறிவித்தார். இதையடுத்து சிம்புவின் ரசிகர்கள் தங்களுக்கு நவம்பர் 25ம் தேதி தான் தீபாவளி என சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சமீபத்தில் நடைபெற்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு நிறைய பிரச்னைகளை சந்தித்து விட்டேன். பிரச்னைகள நான் பார்த்து கொள்கிறேன். என்னை நீங்கள் பார்த்து கொள்ளுங்கள் என கண்ணீர் மல்க பேசிய அவரது ரசிகர்களை மட்டும் இல்லாமல் அனைவரையும் வருத்தமடைய செய்தது.
மாநாடு படம் நாளை வெளியாக இருந்த நிலையில், சிம்புவின் ரசிகர்கள் படத்திற்கான டிக்கெட்டுகளை புக் செய்து விட்டு காத்திருந்தனர். இந்தநிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்; தவிர்க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்
தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்— sureshkamatchi (@sureshkamatchi) November 24, 2021