தமிழ்நாட்டில் மக்களை நலனை காக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி அமையும் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டின் பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கலந்து கொடார். அப்போது பேசிய அவர், சிறந்த கலாச்சாரம் கொண்ட தமிழ்நாட்டின் பாஜக செயற்குழுவில் கலந்துகொண்டதில் பெருமைப்படுவதாக தெரிவித்தார். பல சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாற்றை தன்னகத்தே கொண்ட திருப்பூரில், திருப்பூர் குமரன், வ.உ.சி போன்றவர்களை நினைவு கூர்வதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து பேசிய அவர், கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது, 9 மாதங்களில் தீவிரமாக செயல்பட்டு தடுப்பூசி மூலம் பரவலை கட்டுப்படுத்தி லட்சக்கணக்கான உயிர்களை பாதுகாத்தவர் பிரதமர் மோடி என புகழாரம் சூட்டினார். தமிழ்நாட்டில் வெற்றிவேல் யாத்திரையை தடுக்க முயன்ற தலைவர்கள் எல்லாம் பின்னாளில் “வேலுடன்” புகைப்படம் எடுத்துக்கொண்டதை விமர்சனம் செய்தார்.
கொரோனா காலத்தில் கோயிலுக்கு செல்ல அனுமதிக்காத திமுக அரசு, பாஜகவின் போராட்டத்திற்கு பின்னரே அனுமதி வழங்கியதாகவும் தெரிவித்த அவர், விபூதி, ஆசிர்வாதம் இல்லாமல் எதுவும் நடக்காது எனவும் தனது பேச்சின் போது குறிப்பிட்டார். தமிழ்நாடு நலன்களை பாதுகாப்பது பாஜக மட்டுமே என்று கூறிய ஜெபிநட்டா, திமுக தமிழக கலாச்சாரத்தை , பண்டிகையை மாற்ற முயல்வதாகவும் குறை கூறினார். காஷ்மீரில் 70 ஆண்டு காலமாக குடும்ப ஆட்சி இருந்ததை அகற்றியது பாஜக மட்டுமே என்று கூறிய அவர், காங்கிரஸ், குடும்ப கட்சியாக சுருங்கிவிட்டதாகவும் கடும் விமர்சனம் செய்தார். வாரிசு அரசியலுக்கு முடிவுகட்டுவதுதான் பாஜகவின் இலக்கு என தெரிவித்த அவர், திமுக ஊழல் கட்சி எனவும், வாரிசு அரசியல் நடத்தி வருவதாகவும் ஜெபி.நட்டா சாடினார்.