திமுக ஆட்சியின் போது கொண்டு வந்த வாயில் தோறும் வள்ளுவம் திட்டத்தை, பின்னர் வந்த அதிமுக அரசு செயல்படுத்தவில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சித்துள்ளார்.
எழுத்தாளர் கோ.திருமுருகன் என்பவர் எழுதிய “குறள் அமிர்தம்” எனும் திருக்குறளுக்கான விளக்கவுரை நூல் வெளியீட்டு விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. தொழில் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு “குறள் அமிர்தம்” நூலை வெளியிட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருக்குறள் தமிழிசை பாடல்களை தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம் வெளியிட, தொழிலதிபர் நல்லி குப்புசாமி பெற்று கொண்டார். தொடர்ந்து விழாவில் பேசிய அமைச்சர் மா. சுப்பிர மணியன், தான் மேயராக இருந்த போது, சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்கள், அலுவலகங்கள், கட்டடங்கள் வாயில்களில் “வாயில் தோறும் வள்ளுவம்” திட்டத்தை கொண்டு வந்ததாகவும், பின்னர் வந்த அதிமுக அரசு அத்திட்டத்தை செயல்படுத்தவில்லை எனவும் குறை கூறினார்.