சீனாவில் மாணவர்கள் காதலிக்க வேண்டும் என்பதற்காக சில சீன கல்லூரிகள் ஒரு வாரம் விடுமுறை அறிவித்துள்ளன.
சீனாவில் மக்கள் தொகை வெகுவாக குறைந்து வருகிறது. குழந்தைகளின் பிறப்பு விகிதமும் குறைந்துள்ளது. இதனால் கவலையடைந்துள்ள சீன அரசு, மக்கள் தொகையை அதிகரிக்க, 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த வகையில் சீன கல்லூரிகளும், தங்கள் நாட்டின் மக்கள் தொகையை அதிகரிக்க புதிய அணுகுமுறையை கையாண்டுள்ளன. ’ஃபேன் மெய்’ என்ற சீன கல்விக் குழுமத்தின் கீழ் உள்ள 9 கல்லூரிகள், மாணவர்கள் காதலிக்க வேண்டும் என்பதற்காக ஏப்.1 முதல் 7 ஆம் தேதி வரை (ஒரு வாரம்) வசந்த கால விடுமுறையை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன.
இதையும் படியுங்கள் : ட்விட்டரின் லோகோவை மாற்றிய எலான் மஸ்க் – அதிர்ந்துபோன பயனர்கள்!!
இதுகுறித்து ஃபேன் மெய் கல்விக் குழுமத்தின்கீழ் செயல்படும் மியான்யாங் ஏவியேஷன் தொழிற்கல்வி கல்லூரியின் துணை முதல்வர் லியாங் குவோஹுய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்கள் இயற்கையை நேசிக்கவும், வாழ்க்கையை நேசிக்கவும், காதலிக்கவும் வசந்த கால விடுமுறை அளிக்கப்படுகிறது. மாணவர்கள், கல்லூரியை விட்டு வெளியே செல்லுங்கள். இயற்கையுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். வசந்த காலத்தின் நினைவுகளை நெஞ்சில் ஏந்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.