திடீர் தீ விபத்தில் முற்றிலும் எரிந்த லாரி!

சேரன்மாதேவி அருகே தேங்காய் தும்புகள் ஏற்றிச் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், லாரி முற்றிலும் எரிந்து  நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை சேரன்மகாதேவி வழியாக ஆலங்குளம் பகுதியில் உள்ள…

சேரன்மாதேவி அருகே தேங்காய் தும்புகள் ஏற்றிச் சென்ற லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில், லாரி முற்றிலும் எரிந்து  நாசமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை சேரன்மகாதேவி வழியாக ஆலங்குளம் பகுதியில் உள்ள தனியார் ஆலைக்கு தேங்காய் தும்புகளை ஏற்றுக்கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது.

நேற்று இரவு லாரி சுமார்  8.30 மணியளவில் சேரன்மகாதேவி அடுத்த மேலச்சேவல் வாணியங்குளம் என்ற பகுதியில் வந்த போது மின் ஒயாில் மேலே இருந்த தும்புகள் உரசியதில் திடீரென தீப்பிடித்தது. தொடர்ந்து தீ மளமளவென பரவி லாரியிலும் தீப்பிடிக்க தொடங்கியது. தீயிலிருந்து தப்பித்து லாரி ஓட்டுநர் தப்பி ஓடினார்.

தொடர்ந்து தகவல் அறிந்த சேரன்மாதேவி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் அதற்குள் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. திடீரென லாரி தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

ரூபி.காமராஜ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.