தமிழ்நாட்டில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இரண்டு கண்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடந்து முடிந்தது.முதல் கட்ட வாக்குப்பதிவில் 77.43 % வாக்குகள் பதிவானது. இந்நிலையில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. சென்னை போரூரை அடுத்த கெருகம்பாக்கம் இந்திராநகர் பகுதியில் திமுக, அமமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. விழுப்புரத்தை அடுத்த சோழம்பூண்டி வாக்கு சாவடி மையத்தில் வேட்பாளரின் கணவர் அரிவாளால் வெட்டப்பட்டார். இதுபோன்ற அசம்பாவித நிகழ்வுகளால் வாக்குப் பதிவு நடைபெறுவதில் தாமதம் ஏற்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இன்று மாலை 3 மணி நிலவரப்படி 59.41% வாக்குகள் பதிவானதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. இன்று காலை முதல் பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடர்ந்து வாக்குப்பெட்டிகள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல்துறையினர் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.