கரூர் அருகே, மஹாவீர் ஜெயந்தி அன்று விற்பனை செய்யப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை சாக்கடையில் ஊற்றி போலீசார் அழித்தனர்.
கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பழைய ஜெயங்கொண்டம் கிராமத்தில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மஹாவீர் ஜெயந்தி அன்று விற்பனைக்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த தினேஷ் குமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து, அவரது வீட்டிலிருந்த 381 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். சுமார் 53 ஆயிரம் மதிப்பிலான அந்த மதுப்பாட்டில்களை லாலாப்பேட்டை காவல் நிலையத்தில் காவல்துறையினர் வைத்திருந்தனர்.
அவற்றை நேற்று சிந்தலவாடி கிராம நிர்வாக அலுவலர் பிரபு மற்றும் பிள்ளாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முரளி ஆகியோர் முன்னிலையில், லாலாபேட்டை ஆய்வாளர் ஜோதி தலைமையிலான போலீசார் காவல் நிலைய வளாகத்தில் உள்ள சாக்கடையில் ஊற்றி அழித்தனர். அந்த வீடியோவை போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
—சௌம்யா.மோ






