ராமாபுரத்தில் கோயில் தீ மிதி திருவிழாவில் அக்னி குண்டத்தில் பெண் கால் தவறி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராமாபுத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்
கோயிலில் தீ மிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ராமாபுரம்,
வளசரவாக்கம், மதுரவாயல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 500க்கும்
மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து தீ மிதித்து தங்கள்
நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னா் அக்னி குண்டத்தில் இறங்கும்போது
பெண் பக்தர் ஒருவர் கால் தவறி இடது அக்னி குண்டத்தில் விழுந்தார்.
அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விருகம்பாக்கம் காவல் ஆய்வாளர் பாலச்சந்தர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அக்னி குண்டத்தில் தவறி விழுந்த பெண்ணை நொடி பொழுதில் துரிதமாக செயல்பட்டு தீயில் இருந்து தூக்கி காப்பாற்றினார்கள். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பெண் பக்கர் ஒருவர் கால் இடறி அக்னி குண்டத்தில் தவறி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தீயில் விழுந்த பெண்ணை துரிதமாக செயல்பட்டு மீட்ட தீயணைப்பு வீரர்களின் செயல் காண்பவரே நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ரூபி.காமராஜ்







